திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் வெடித்ததால் பயங்கர அதிர்வு ஏற்பட்டது.
சேயூர் சாலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வரும் நிலையில் இங்கு முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் ஆவணங்களை எரித்ததாக கூறப்படுகிறது. அப்போது பலத்த சத்தத்துடன் மர்மப்பொருள் ஒன்று வெடித்து சிதறியது. இதில் சுற்றுப்புற பகுதியில் அதிர்வு உணரப்பட்டது.
இதனால் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகளில் லேசான சேதம் ஏற்பட்டது. அச்சமடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்ததோடு, அங்கு எரிந்துக்கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















