திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நடராஜர் சன்னதி முன்பாக அமைக்கப்பட்ட மேடையில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
இதில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலம், வெளி நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததோடு, நாட்டிய நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர்.
















