நிஜ்ஜார் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த கனடாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ல் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலைக்கு இந்திய அரசே காரணம் எனக் குற்றம் சாட்டினார்.
இதனால் இந்தியா மற்றும் கனடா உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த வழக்கில் 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பேசியுள்ள ஒட்டாவாவுக்கான இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி தினேஷ் பட்நாயக், நிஜ்ஜார் வழக்கில் இந்தியர்களுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.
















