டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதை பலுசிஸ்தான் மற்றும் ஆப்கனில் கொண்டாட்டம் களைகட்டியது.
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதை, பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மக்கள் நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும், இந்தியாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள், இந்தியாவுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்துக்கொண்டிருந்த இரண்டு பாகிஸ்தான் பெண்கள், பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, தோல்வியை நோக்கி சென்றபோது, பொறுமை இழந்த அப்பெண், பாகிஸ்தான் வீரர்களை வார்த்தைகளை கொட்டி தீர்த்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
















