தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆன்மிக இசை நிகழ்ச்சியுடன் மகா சிவராத்திரி விழா கோலகலமாக நடைபெற்றது.
மகா சிவராத்திரியை ஒட்டி, தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு மாலை ஆறு மணி முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர். இரவு முழுவதும் பெருவுடையாரை வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்து மகா சிவராத்திரியை கொண்டாடினர்.
குறிப்பாக, வராகி அம்மன் சன்னதி, நந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தீபம் ஏற்றி வழிபடும் பக்தர்கள், மின்னொளியில் ஜொலிக்கும் கோயிலை சுற்றி வந்து ரசித்து வந்தனர்.
















