பாரதம் உலகின் குருவாக உருவெடுப்பதை நாம் பார்க்க இருப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென் பாரதத் தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார்.
சம்ஸ்கார்பாரதி அமைப்பின் சார்பில் சென்னை அம்பத்தூரில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பூர்ணிமா பாக்யராஜ், எழுத்தாளர் ஜோடி குரூஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
முன்னாள் காவல் துறை தலைவர் பி.எம். நாயர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய கன்னியாகுமரி வெள்ளி மலை ஆசிரமத்தின் குரு மகா சன்னிதானம் பூஜன்ய சைத்தன்யானந்தா சுவாமிகள் இறை பக்தியின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென் பாரதத் தலைவர் வன்னியராஜன், இந்தியர்கள் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் மூலம் உலகை வெற்றி கொள்வோம் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை நினைவுகூர்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் சம்ஸ்கார் பாரதி அமைப்பின் அகில பாரத செயலாளர் நிரஞ்சன் பாண்டா, அகில பாரத செயற்குழு உறுப்பினர் ஸ்ரீபதி மற்றும் சம்ஸ்கார்பாரதி அமைப்பின் மாநில தலைவர் தாட்சாயிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















