தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 டன் தக்காளி சேதமடைந்தது.
ஓசூரில் இருந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு தக்காளி ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற போது சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் சரக்கு வாகனம் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில் 3 டன் தக்காளி சாலையில் சிதறி சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















