இந்தியா – கனடா செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது என கனடா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
டெல்லியில் வரும் திங்களன்று செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் கனடாவின் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் இவான் சாலமன் மற்றும் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் விவேக் கோயல் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இதுகுறித்து பேசிய விவேக் கோயல், கனடா பல ஆண்டுகளாக வலுவான திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இவற்றை இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் மற்றும் திறமைகளுடன் இணைப்பது, செயற்கை நுண்ணறிவில் ஒரு அற்புதமான வாய்ப்பை உருவாக்குகிறது எனவும் அவர் கூறினார்.
















