திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி அவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் கலந்துக்கொண்டார்கள்.

இந்நிகழ்வில் தொடக்கமாக முன்னால் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் மகன் ராஜ்மோகன் வரவேற்பு உரை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பேசியது :
மறைந்த கிருஷ்ணசாமி எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தவர் . என் சிறு வயதில் இருந்தே அவரை பார்த்து நான் வளர்ந்துள்ளேன். குறிப்பாக நாங்கள் வழக்கறிஞராக இருந்த பொழுது உண்மையை மட்டும் கண்டறிந்து வழக்குகளை கையாளுவோம். இதற்கு சிறந்த உதாரணம் மறைந்த கிருஷ்ணசாமி ஐயா ஆவார். மேலும் கடந்த காலத்தில் பணத்தை எதிர்பார்க்காமல் முதலில் வழக்கு என்னவென்று நாங்கள் சிந்திப்போம், ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி பணம் முதலில் வழக்கு பிறகு என மாறி விட்டது என்று தெரிவித்தார். இந்த இடத்தில் எனக்கு பேச வாய்ப்பளித்த முன்னாள் ஐயா கிருஷ்ணசாமி அவர்களின் குடும்பத்தாருக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கிருஷ்ணசாமியின் குடும்ப உறுப்பினர்கள் உமா பிரித்திவிராஜ் லீலாவதி கல்பனா , ஸ்ரீநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர்கள் நீதிபதிகள் மற்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் மது ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் வாழ்வியலை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தனர்.
















