தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட தொன்மையான சிலைகளை மீண்டும் ஒப்படைக்க அந்நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள், தொன்மையான பொருட்கள், கலை பொக்கிஷங்களை கண்டறிந்து மீட்பது,
சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பணிகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
அந்த வகையில் தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சா்வதேச முக்கிய நிறுவனங்களிலும், ஏல நிறுவனங்களிலும் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளன.
இதனை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில் சிலைகளை திருப்பி தர அந்நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
அதில் திருவாரூர் கைலாசநாதர் கோயில் சிலைகள், தஞ்சை நாகநாத சுவாமி கோயில் சிலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
















