விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிபதி மீது அரிவாள் வீசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குளம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார்.
இவர் மீது அவரது மனைவி புகார் அளித்திருந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதில் பாலமுருகனுக்கு எதிராக நீதிபதி சுதாகர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், நீதிபதி சுதாகர் மீது அரிவாள் வீசியுள்ளார்.
தொடர்ந்து பாலமுருகனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















