திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மின் இணைப்புகள் அவசர கதியில் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 198 வீடுகள் மற்றும் தொழில் கூடங்கள் திறக்கப்பட்டன.
முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்த இந்த கட்டிடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை என தெரிகிறது.
பயன்பாட்டிற்கு திறந்து வைத்தபின் அவசரகதியில் மின் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் முகாம் வாசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்
















