பெரு நாட்டில் காலனித்துவ காலத்து பாரம்பரிய ‘பஜாதா டி லாஸ் டயப்லோஸ்’ திருவிழா கொண்டாடப்பட்டது.
பஜாதா டி லாஸ் டயப்லோஸ்’ என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் ‘பிசாசுகளின் இறக்கம்’ என்று பொருள். பெரு நாட்டின் செரோ பிளாங்கோ மலைப்பகுதிகளில் இந்த வினோத திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டு நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இசை மற்றும் நடனத்துடன் மலையில் இருந்து இறங்கி வருவதை காண சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்தனர்.
கலைஞர்களின் ஆக்ரோஷமான நடனமும், பாரம்பரிய இசைக்கருவிகளின் முழக்கமும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
















