கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை வாடகைக்கு விட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறந்த சிற்பங்களை கொண்ட இந்த மண்டபத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை உணராமல் அறநிலையத்துறை வாடகைக்கு விட்டிருப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள்,
கோயில் சொத்துகளை அறநிலையத்துறை லாபத்திற்காக பயன்படுத்தியிருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.
தொடர்ந்து, கடைகள் சட்டப்படியே வாடகைக்கு விடப்பட்டிருந்தாலும், பழமையான சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியிருப்பதால்,
மண்டபத்தில் உள்ள கடைகளை கட்டாயம் அகற்ற வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், கடைகளை அகற்றத் தவறினால்,
அறநிலையத்துறை இணை ஆணையரை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்என எச்சரித்ததுடன்,
வியாபாரிகள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















