கரூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த லாரி மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், அணையை கட்டுவதற்கும், பிற பணிகளுக்கும், காவிரி ஆற்றிலிருந்து மணல் அள்ளப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு சென்ற இளைஞர்கள், லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர், மணல் கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















