சட்டமன்ற பேரவையில் நடப்பாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர் உயர்ந்த பொருளாதாரம் உடைய மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் திகழ்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் இளைஞர்கள் சிறந்து விளங்கிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
மாபெரும் அளவில் வெளிநாட்டு முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் திருக்குறளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்க உள்ளோம் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
















