டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெல்லியில் ஏஐ உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவருடன் கூகுள் உயரதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். முன்னதாக ஊடகங்களிடம் பேசிய சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவுடன் இந்தியாவுக்கு அசாதாரணமான பாதை மற்றும் வாய்ப்பு இருக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
















