டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை – எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
அப்போது இருவரும் இருநாட்டு பரஸ்பர நலன் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே டிஜிட்டல் மற்றும் AI துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
















