அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக, கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் பல கிலோமீட்டா் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகன நெரிசலைத் தவிா்க்க, கியூபா அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இச்செயலி மூலம் முன்பதிவு செய்யும் வாகன ஓட்டிகளும், எரிபொருள் நிரப்ப பல வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.
வெனிசுலா, மெக்ஸிகோ போன்ற நாடுகளிலிருந்து கியூபாவுக்கு அனுப்பப்படும் கச்சா எண்ணெய் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டதே இந்த நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
















