மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் காதலியை, சைகோ காதலன், பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துவாரகாபுரியில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் வந்ததையடுத்து, போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு MBA மாணவி ஒருவர் ஆடைகளின்றி, சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில், அந்த மாணவியின் காதலன், பரிசு தருவதாகக்கூறி அழைத்துச் சென்று, கொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொடூரக் கொலைக்கு பிறகு மும்பைக்கு தப்பிச் சென்ற அந்த சைகோவை போலீசார் கைது செய்தனர்.
அப்போதும், அந்த சைகோ கொலைகாரன் எவ்வித பதற்றமுமின்றி நடந்தது நடந்துவிட்டது என பத்திரிகையாளர்களிடம் பதிலளித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
















