சகோதரர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என இங்கிலாந்து அரசர் தெரிவித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது.
ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டனின் பெயர் அடிபட்டது.
எலிசபெத் ராணியின் 3வது மகனான ஆண்ட்ரூ பெண் ஒருவரை கடத்தியதாகவும் பல ரகசிய தகவல்களை வெளியில் பகிர்ந்ததாகவும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை கருத்தில் கொண்ட இங்கிலாந்து அரசர் சார்லஸ் தனது சோகதரரை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கியதோடு அரண்மனையை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து பதவியை துஷ்பிரயோகம் செய்த ஆண்ட்ரூ சிறைபிடிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சோகதரர் கைது செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மன்னர் சார்லஸ், ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் குறித்த செய்திகள் மிகவும் கவலையளிக்கிறது எனவும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் குற்றம் உறுதியானால் சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் இளவரசர் சார்லஸ் தெரிவித்திருந்தார்.
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டார்.
வர்த்தக தூதராக பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இவர் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறைக்கு மன்னர் தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைத்தது.
இதற்கிடையே பல மணி நேரம் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டனை தற்காலிகமாக விடுவித்தனர்.
















