நிலையான மற்றும் குழந்தைகளை மையமாக கொண்ட நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆரோவில்லில் ரயில்வே வாரியத்தின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் முனைவர் ஜெயந்தி எஸ்.ரவி, தெற்கு ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஜெயந்தி, இத்திட்டத்தை ஒரு வலுவான மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட கட்டமைப்போடு தொடங்க வேண்டும் எனவும்,
வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமல்லாமல் ஆரோவில்லின் கல்வி நிலப்பரப்பில் ஒரு நிலையான அங்கமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
















