ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அடிமனை பிரச்னையில் அடிமனை அரங்கனுக்கே சொந்தம் என திருச்சி மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் பல தலைமுறைகளாக வீடு கட்டி குடியிருக்கும் 41 பேர் தங்களுக்கு அந்த இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என 2007ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 19 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். அதில் ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தில் குடியிருப்போரின் அடிமனைகள் அரங்கனுக்கே சொந்தமானது எனவும் அதில் வசிப்போர் அடிமனைக்கு சொந்தம் கொண்டா முடியாது எனவும் கூறினார்.
அந்த அடிமனைகளில் வீடு கட்டியோர் 3 மாதங்களில் காலி செய்து இடத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கடந்த காலங்களில் வழங்கிய பட்டாக்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.
















