முந்தைய காங்கிரஸ் அரசு, எல்லைகளை திறந்து வைத்ததால்தான் அசாமில் ஊடுருவல் அதிகரித்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
அசாமின் சாச்சார் மாவட்டத்தில், “துடிப்பான கிராமங்கள்” என்ற திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், எல்லையோர கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்வதை தடுக்கவும், சர்வதேச எல்லைகள் வழியாக நடக்கும் சட்ட விரோத ஊடுருவலை தடுக்கவும், துடிப்பான கிராமங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை என குற்றம்சாடிய அமித்ஷா, தற்போது இங்கு ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
















