திருப்பதி தேவஸ்தானத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை விமானத் துறையில் புகுத்துவதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின், திருமலை தேவஸ்தானம் தற்போது செயல்படுத்தி வரும் அதிநவீன AI தொழில்நுட்பத்துடன் கூடிய கமாண்ட் கண்ட்ரோல் சென்டரை நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவஸ்தானத்தின் இந்த நிர்வாக முறையைப் பின்பற்றி, அனைத்து விமான நிலையங்களையும் ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் கமாண்ட் கண்ட்ரோல் சென்டர் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிகை 74 இல் இருந்து 160 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
















