மெக்சிகோவில் போபோகாட்பெட் எரிமலை வெடித்து 20 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் எழுந்ததால் பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான போபோகாட்பெட் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து வெடித்து வருகிறது.
எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் புகை மண்டலம் சுமார் 20 ஆயிரம் அடி உயரத்திற்கு எழுவதால் பொது மக்களுக்கு அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பியூப்லா, சான் ஆண்ட்ரஸ் மற்றும் சான் பெட்ரோ சோலுலா ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகள் எரிமலையின் சாம்பல் படலத்தால் மூடப்பட்டுள்ளன.
















