வரும் மாா்ச் முதல் யூடிஎஸ் செயலி இயக்கம் நிறுத்தப்படுவதால், பயணிகள் ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
ரயில் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த செயலி தளமாக ரயில் ஒன் செயலி தற்போது முன்னிலைப்படுத்தப்படுகிறது.
இதையடுத்து ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள யூடிஎஸ் செயலி வரும் மாா்ச் முதல் நிறுத்தப்படுகிறது. முதல்கட்டமாக அதில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு, முன்பதிவு புதுப்பித்தல், புதிய பயனாளா் பதிவு ஆகியவை நிறுத்தப்படும்.
எனவே, இனிமேல் பயணிகள் ரயில் ஒன் செயலியைப் பதிவிறக்கம் செய்து அனைத்து சேவைகளையும் பெறலாம் என இந்திய ரயில்வே கூறியுள்ளது.
















