இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
தனது வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக போராடிய நல்லகண்ணு, தற்போது இயற்கையுடன் போராடி வருவதாக வேதனையுடன் குறிப்பிட்டார்.
















