ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, மானிய விலை யூரியாவை குடோனில் பதுக்கி வைத்து வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜ்நகர் அருகே பழனிச்சாமி என்பவருக்குச் சொந்தமான குடோனை, அகமத் அலி என்பவர், கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.
இங்கு மத்திய அரசின் மானிய விலை யூரியாவை பதுக்கி வைத்து, வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு வெள்ளை நிற சாக்கு மூட்டைகளுக்கு மாற்றி, லாரிகள் மூலம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தி, சுமார் 30 டன் யூரியா மற்றும் கோதுமையை பறிமுதல் செய்தனர். கடத்தல் பின்னணி மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















