மூன்றாம் உலகப் போரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தொடங்கியது. இந்த போர் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, பிபிசி செய்தி நிறுவனத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டியளித்தார்.
இந்நிலையில் அந்த பேட்டியின் சுருக்கத்தை, விளாடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மூன்றாம் உலகப் போரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா வெற்றி பெறுவதை தடுக்க வேண்டும் என கூறிய ஜெலென்ஸ்கி, ரஷ்யா தனது விருப்பத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறது எனவும் கூறினார்.
மக்கள் தங்கள் விருப்பப்படி வாழ்வதை புதின் அரசு மறுக்கிறது எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்
















