வளர்ந்த இந்தியாவை உருவாக்க வளர்ந்த கேரளம் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
கேரளாவின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், அதுகுறித்து பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றுவது மாநிலத்தின் பாரம்பரியத்தை அதன் அசல் தன்மையுடன் வெளிப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரள மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது அம்மாநிலத்தின் பெருமையை உயர்த்தும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
















