கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றியுள்ள ஏரிகளில் அளவுக்கு அதிகமாக வண்டல் மண் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருக்கோவிலூர் பகுதியில் உள்ள மேலத்தாழனூர் மற்றும் வெண்மார் ஆகிய இரண்டு ஏரிகளையும் ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்ததாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவேரி மற்றும் நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த சுடலை என்பவர் தெரிவித்துள்ளார்.
வண்டல் மண் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீதும், அதற்கு துணைப் போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
















