காரைக்குடி தேனாறு கரையோரம் பல லட்சம் மதிப்பிலான மரங்கள் அனுமதியின்றி வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை சாலையில் உள்ள சுடுகாடு பகுதி மற்றும் தேனாறு கரையில் அதிகளவில் கருவை மரங்கள் உள்ளன. இவற்றை மர்மநபர்கள் சிலர் இரவோடு இரவாக வெட்டி லாரிகளில் கடத்தியுள்ளனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனர். சம்பவம் குறித்து துணை வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
















