அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் ஆகியோருக்கு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை, முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதியினர் நடத்தி அசத்தியுள்ளனர்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் ஆகியோரின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதியினர், தங்களது இல்லத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் ஜோடிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில்,டெண்டுல்கர் மற்றும் அம்பானி குடும்பத்தினர் ஒன்றிணைந்து மணமக்களை வாழ்த்தினர். விழாவின் ஒரு பகுதியாக, விநாயகப் பெருமானுக்கு சிறப்புப் பூஜை மற்றும் பிரார்த்தனை உள்ளிட்ட பாரம்பரிய இந்து மதச் சடங்குகள் நடைபெற்றன.
















