துபாயில் நடப்பாண்டு இறுதிக்குள் “Uber Air” சேவையைத் தொடங்கப்போவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், கார்பன் வெளியேற்றம் இன்றி இந்த விமானங்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், செங்குத்தாகத் தரையிறங்குதல் மற்றும் மேலே செல்லுதல் திறனை கொண்டுள்ளதால், இவற்றுக்குத் தனிப்பட்ட ஓடுதளங்கள் தேவையில்லை என கூறப்படுகிறது.
முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் வான்வழி வாகனங்களாக உருவாக்கப்பட்டுள்ள Uber Air” சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் துபாயில் தொடங்கவுள்ளதாகவும், பயணிகள் தங்களின் வழக்கமான Uber செயலியை பயன்படுத்தியே இந்த வான்வழிப் பயணத்தை முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சேவை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் துபாய் போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில், சாலை மார்க்கமாக ஒரு மணிநேரம் ஆகும் பயணத்தை, இந்த உபெர் ஏர் வெறும் 10 முதல் 15 நிமிடங்களில் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















