கோவை மாவட்டம், அன்னூர் அருகே சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
ஒன்னக்கரசம்பாளையத்தை சேர்ந்த முருகசாமி என்பவர், கடந்த வருடம் தனது மகன் ராஜசேகருக்கு சொத்துக்கள் அனைத்தையும் எழுதிக் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் ராஜசேகர் தந்தையை முறையாக கவனித்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மகனுக்கு கொடுத்த சொத்தை மீட்டுத் தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் முருகசாமி மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜசேகர், அருகே கிடந்த கல்லை போட்டு முருகசாமியை கொலை செய்துள்ளார்.
தகவலறிந்த அன்னூர் போலீசார், உடலை மீட்டதுடன் ராஜசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
















