திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை சார்பில் நடத்தப்படும் கிரிவலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்ள உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நீதிமன்றம் உத்தரவின் பேரில் தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாசி பவுர்ணமியையொட்டி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை சார்பில் கிரிவலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள கிரிவலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆதீனங்கள் மற்றும் இந்து அமைப்பினர் என லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
கிரிவலத்தில் பங்கேற்கும் நபர்களுக்கு ஒரு லட்சம் ருத்ராட்சம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
















