ஈரான் மீதான துல்லிய தாக்குதல்..கமேனியின் இறுதி நிமிடங்கள்!
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home கட்டுரை

ஈரான் மீதான துல்லிய தாக்குதல்..கமேனியின் இறுதி நிமிடங்கள்!

Manikandan by Manikandan
Mar 2, 2026, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் உச்ச தலைவரான கமேனியை அமெரிக்காவும், இஸ்ரேலும் எப்படி கொன்றன? அவர் இருக்கும் இடம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? பிப்ரவரி 28ம் தேதி அவர் கொல்லப்பட காரணம் என்ன?… பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

வெனிசுலாவிற்குள் நுழைந்து, அந்நாட்டின் அதிபர் மதுரோவை கைது செய்ய 2 மணிநேரம் 20 நிமிடங்களை மட்டுமே அமெரிக்கா எடுத்துக்கொண்டது. ஒரு நாட்டின் தலைவரை இத்தனை குறைவான நேரத்தில் அமெரிக்கா கைது செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த அச்சரியம் அடங்குவதற்குள், ஈரானின் உச்ச தலைவரான கமேனியை வெறும் 2 மணிநேரம் 5 நிமிடங்களில் இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளன.

அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் கமேனி பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த இஸ்ரேல், கடும் கண்டனத்தை பதிவு செய்தது. ஈரான் மட்டும் அணுஆயுதங்களை தயாரித்துவிட்டால், முதல் தாக்குதலை தங்கள் மீதுதான் நடத்தும் எனவும் இஸ்ரேல் அச்சம் தெரிவித்தது.

ஈரானின் அணுஆயுத தயாரிப்பு முயற்சிக்கு அமெரிக்காவும் எதிர்ப்பை பதிவு செய்தது. யுரேனியத்தைச் செறிவூட்டி அணுஆயுதங்கள் தயாரிப்பதை கைவிட வேண்டும் எனவும், அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியுறுத்தினார்.

ஆனால், கமேனி அதனை சிறிதும் சட்டை செய்யவில்லை. எனவே, ஈரான் மீது தாக்குதல் நடத்தி கமேனியை கொலை செய்ய அமெரிக்காவும், இஸ்ரேலும் முடிவெடுத்தன. இதற்காக அந்த இரு நாடுகளும் இரவு, பகலாக வியூகங்களை வகுக்க தொடங்கின.

அமெரிக்காவும், இஸ்ரேலும் தன்னை குறிவைத்து விட்டன என்பதை அயதுல்லா அலி கமேனியும் நன்கு அறிந்தே இருந்தார். அதனால், லவிசான் (Lavizan) என்ற பகுதியில் உள்ள அதிநவீன பதுங்கு குழிக்குள் சென்று அவர் வசிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.

பதுங்கு குழிக்குள் இருந்தபடி செல்போன், கணினி உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் தான் இருக்கும் இடம் வெளியே கசித்துவிடும் என்பதால், அவற்றைகூட கமேனி பயன்படுத்தவில்லை எனவும், யாராவது கமேனியை சந்திக்க வேண்டும் என்றால், கண்களை கட்டிதான் அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை ஈரான் இன்டர்நேஷனல் (Iran International) என்ற செய்தி நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

மறுபுறம், கமேனி உள்ள இடத்தை கண்டுபிடிக்கும் பணியில், இஸ்ரேலின் மொசாத்தும், அமெரிக்காவின் சி.ஐ.ஏவும் முழுமூச்சாக இறங்கின. கமேனி வெளியிட்ட வீடியோக்களின் தரம் மற்றும் பின்னணி ஒலிகளை ஆய்வு செய்தன. Low-orbit satellites எனப்படும் குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை கொண்டும், Drones மூலம் முக்கிய இடங்களை தொடர்ந்து கண்காணித்தன.

பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு, கமேனி தங்கியுள்ள இடத்தை அமெரிக்காவும், இஸ்ரேலும் உறுதி செய்தன. இதனையடுத்து, பிப்ரவரி 28ம் தேதி காலை 6 மணியளவில் இஸ்ரேலில் இருந்து ஏவுகணைகள் ஈரானை நோக்கி செலுத்தப்பட்டன. அன்றைய தினம் தெஹ்ரானில் உள்ள Leadership House Compound எனப்படும் தலைமை இல்ல வளாகத்தில் கமேனி இருந்தார். ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ராணுவத் தளபதிகளுடன் அவர் அப்போது ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.

ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே (Aziz Nasirzadeh), ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல் ரஹீம் மௌசாவி (Abdolrahim Mousavi), முப்படைக் தலைமைத் தளபதி முகமது பாகேரி (Mohammad Bagheri) உள்ளிட்ட 40 உயரதிகாரிகள் அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

அந்த இடத்திற்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் “செபா வாலி-ஏ அம்ர்” (Sepah Vali-e Amr) என்ற சிறப்பு ராணுவப் பிரிவு ஈடுபட்டிருந்தது. நூற்றுக்கணக்கான வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏவுகணை, ட்ரோன் உள்ளிட்டவற்றை கண்காணிக்க சென்சார் கருவிகளும் பொருத்தப்பட்டிருந்தன.

ஆனால், அந்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, காலை 9.30 மணியளவில் இஸ்ரேலின் ஏவுகணைகள் அந்த கட்டடத்தை துல்லியமாக தாக்கின.

இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச அதிபரான கமேனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சேர்த்து, பாதுகாப்புத் துறை அமைச்சர், தரைப்படைத் தளபதி, முப்படைக் தலைமைத் தளபதி, உளவுத்துறை அதிகாரிகள், கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி, மகள், மருமகன், பேரக்குழந்தைகள் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 2ம் தேதி யூதர்களின் முக்கிய பண்டிகையான பூரிம் (Purim) என்ற பண்டிகை தொடங்குகிறது. பண்டைய காலத்தில் ஈரானில் இருந்த யூதர்களை அழிக்க ஹமான்(Haman) என்பவர் திட்டம் தீட்டினார். அவரிடம் இருந்து யூதர்கள் தப்பித்ததையும், ஹமான்(Haman) கொல்லப்பட்டதையும் நினைவுகூரும் வகையில் இந்த பூரிம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகை தொடங்குவதற்கு சரியாக 2 நாட்களுக்கு முன்னதாக, கமேனி கொல்லப்பட்டுள்ளார். யூதர்களுக்கு எதிராக அன்று ஹமான் இருந்ததுபோல, இன்று கமேனி செயல்பட்டதாகவும், அதனால்தான் அவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: usbasesiranuaetrumpattackIranattackedisraeltodayirandubaidubaiairportisraeliran
ShareTweetSendShare
Previous Post

ஈரான் தாக்குதல் எதிரொலி – இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் வெடிக்க வாய்ப்பு – மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

Next Post

ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் – பொதுமக்கள் அச்சம்!

Related News

நீருக்கடியில் ட்ரோன் மூலம் தாக்குதல்….அமெரிக்க எண்ணெய் கப்பலை அழித்து பழிதீர்த்த ஈரான்!

ஹார்மோஸ் ஜலசந்தியில் கடல் கண்ணி வெடிகள் – ஈரானின் செயலால் அதிகரிக்கும் அச்சம்!

ஈரான் தொடங்கும் PROXY WAR – ஊடுருவிய ஸ்லீப்பர் செல்கள்…அச்சத்தில் அமெரிக்க மக்கள்..சிறப்பு தொகுப்பு!

ஈரான் போரில் சீனா மௌனம் காக்கும் ரகசியம் – அதிர வைக்கும் பின்னணி!

விரைவில் போர் முடியும் – ட்ரம்ப் : அமெரிக்கா முடிவு செய்ய முடியாது என ஈரான் பதிலடி – சிறப்பு கட்டுரை!

மேற்கு ஆசிய போரில் அழுத்தத்தை அதிகரிக்கும் ஈரான் : அமெரிக்கா – இஸ்ரேலுக்கு நீடிக்கும் சவால் : பின்வாங்குவாரா டிரம்ப்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies