டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
கொல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஃபின் ஆலனின் அதிவேக சதத்தால் 12 புள்ளி 5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பின் ஆலன் 33 பந்துகளிலேயே சதமடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார்
















