தமிழகம், மேற்கு வங்கம் உட்பட 8 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து குடியரசுத்தலைவர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார்.
டெல்லியின் துணை நிலை ஆளுநராக இருந்த வினய் குமார் சக்சேனா, லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தரஞ்சித் சிங் சந்து, தில்லியின் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த சிவ பிரதாப் சுக்லா, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் தெலுங்கானா ஆளுநராக இருந்த ஜிஷ்ணு தேவ் வர்மா, மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நந்த் கிஷோர் யாதவ், நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன், பீகார் மாநில ஆளுநராகவும், லடாக்கின் துணை நிலை ஆளுநராக இருந்த கவிந்தர் குப்தா, இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என குடியரசுத்தலைவர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
















