சிதம்பரம் அருகே சாலையில் நடந்து சென்றவர்களை கஞ்சா போதையில் வந்த சிறுவர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு கொள்ளுமேடு தெருவில் இருசக்கர வாகனங்களில் 6 சிறுவர்கள் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்துள்ளனர்.
அப்போது, சாலையில் நடந்து சென்ற இஸ்லாமியர்களை அவர்கள் தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாக்குதல் தொடர்பாக ஜமாத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட இளைஞர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஓமக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் உட்பட 5 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 சிறுவர்கள் கடலூரில் உள்ள சீர்திருத்தப் பள்ளியிலும், இளைஞர் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
















