திருநறையூர் இராமநாத சுவாமி கோயிலில் சனி பகவானுக்கு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோயில் அருகே திருநறையூரில் ராமநாத சுவாமி கோயிலில் சனி பகவான் மந்தா தேவி, ஜேஷ்டாதேவி என இரு மனைவியருடனும், மாந்தி, குளிகன் என இரு புதல்வர்களுடனும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
இங்கு சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சனி பகவானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















