டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது.
பின்னர் 256 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்டுகளும், அக்சர் படேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
















