வேளாண் மற்றும் உணவு பொருட்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் வேளாண் மற்றும் உணவு பொருட்கள் ஏற்றுமதி அளவில் வளர்ந்து 7வது இடத்தில் இருக்கிறது என கூறினார்.
வரும் நாட்களில் முதல் இடத்தை நோக்கி நம்நாடு செல்லும் என கூறிய பியூஷ் கோயல், 9 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உலக நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளதே இதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.
மேலும், இதன் வாயிலாக, 38 நாடுகளுக்கு வரியில்லாமல் பொருட்களை அனுப்பலாம் எனவும் பியூஷ் கோயல் கூறினார்.
















