மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் எதிரொலியாக 400 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை உலக சந்தையில் விடுவிக்க சர்வதேச எரிசக்தி அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
சர்வதேச எரிசக்தி அமைப்பில் இதுபோன்ற ஒருங்கிணைந்த முடிவு எடுப்பது இது 6-வது முறையாகும். கடைசியாக 2022-ம் ஆண்டில் இருமுறை இதேபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















