உத்தராகண்டின் சுற்றுச்சூழல் பாதுகாவலரான இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் பாய் காலமான நிலையில் சரயு நதிக்கரையில் இந்து முறைப்படி அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் பாய், மகாத்மா காந்தியின் தத்துவங்களாலும், காந்தியின் சீடரான சர்லா பெஹனின் எளிமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையாலும் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தார்.
1970-களில் உத்தராகண்டின் கௌசானி பகுதியில் குடியேறிய அவர், உத்தரகாண்ட் மலைப்பகுதிகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த டேவிட் பாய் மறைவிற்கு உத்தரகாண்ட் முதல்வர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது இறுதி விருப்பத்தின்படி அவரது உடல் உத்தராகண்டின் புனிதமான சரயு நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது மகள் தாரா தீபிகா, இந்து சமய சடங்குகளின்படி தனது தந்தைக்கு இறுதி மரியாதைகளைச் செய்து சிதைக்குத் தீ மூட்டினார்.
ஒரு வெளிநாட்டவர் இந்தியக் கலாச்சாரத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடும், அவரது மகள் முறைப்படி சடங்குகளைச் செய்ததும் அங்கிருந்த உள்ளூர் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
















