ஈரானின் அணு ஆயுத கட்டமைப்பு, ஏவுகணைகளை அழிப்பதே தங்களது குறிக்கோள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் கூட்டாக தாக்குல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணு ஆயுத கட்டமைப்பு, ஏவுகணைகளை அழிப்பதே தங்களது அடுத்தடுத்த குறிக்கோள எனவும் மூன்றாவது குறிக்கோள் மொஜ்தாபா கமேனி அரசை கவிழ்ப்பதுதான எனவும் தெரிவித்தார்.
லெபனான் அரசு, ஹிஸ்புல்லாவை ஒடுக்க தவறிவிட்டதாக கூறிய அவர், அந்த அமைப்பை நிராயுதபாணியாக்கவில்லை என்றால், இஸ்ரேல் அதை நேரடியாகச் செய்யும் என்று எச்சரித்தார்.
















