வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவைகள் நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாளை முதல் சென்னை கடற்கரை – பரங்கிமலை இடையே 43 ஜோடி பறக்கும் ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 2 ஜோடி ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரங்கிமலை – வேளச்சேரி இடையே 3 ஜோடி ரயில் இயக்கப்படும் எனவும், இந்த நீட்டிப்பு, பறக்கும் ரயில் தடத்தில் நேரடி இணைப்பை உறுதி செய்வதோடு, தினசரி பயணிகளுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















