அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை வி.கே.சசிகலா தொடங்கியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில் வி.கே.சசிகலா புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். முன்னதாக ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி கட்சியின் கொடியை அவர் அறிமுகம் செய்து இருந்தார்.
இந்நிலையில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என கட்சியின் பெயரை சசிசலா அறிவித்துள்ளார். மேலும் கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு எனவும் அவர் அறிவித்துள்ளார்.
















