சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் மாா்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 80 லட்சம் பீப்பாய் வரை குறையும் என சா்வதேச எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று வான்வழி தாக்குதலை தொடங்கியதிலிருந்து சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. உலகின் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.
போரின் தீவிரத்தால் உலகளாவிய நுகா்வு வளா்ச்சி மதிப்பீட்டை சுமாா் 25 சதவீதம் வரை சர்வதேச எரிசக்தி முகமை குறைத்துள்ளது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, சா்வதேச எரிசக்தி முகமையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒன்றிணைந்து, தங்களின் அவசர கால இருப்பிலிருந்து 40 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை சந்தையில் விடுவிக்க ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளன.
இந்நிலையில் தனது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ள சா்வதேச எரிசக்தி முகமை, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் மாா்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 80 லட்சம் பீப்பாய் வரை குறையும் என கூறப்பட்டுள்ளது.மேலும், இது உலக வரலாற்றிலேயே கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்பு என்றும் தெரிவித்துள்ளது
















